Quantcast
Channel: கவிதை – Sri Lanka Muslim
Viewing all articles
Browse latest Browse all 220

அல்ஹம்துலில்லாஹ் (கவிதை)

$
0
0

வாப்பா என்றழைக்க
இரு பிள்ளைச் செல்வங்கள்
பெரியப்பா என்றழைக்க
பதினொருவர் – இது கண்டு
ஆனந்த வெள்ளத்தில்
அள்ளுண்டு போகிறது – என்
ஆள் மனது.

ஆல் சூரி பூங்காவில்
இன்று அதிகாலை
மலர்ந்திருக்கும் புத்தம் புது
பெண் பூவை வாழ்த்தி வரவேற்கிறேன்
அல்ஹம்துலில்லாஹ்.

இந் நாளிகையில்
என் விழியோரம்
கண்நீர் துளிகள்
துள்ளி ஓடுகிறது
அதில் ஆனந்தமும்
அங்கலாய்பும் கலக்கிறது

சொர்க்கத்தில் மணம் பரப்பும்
மலர்கள் இரண்டின்
மனப்பதிவுகள் – என்
நெஞ்சத்தை கிழிக்கிறது
இந்நாளில்.

ஆனாலும் எஜமானின்
அழைப்புக்கு பதில் சொல்லவே
அவசரமாய் சென்றார்கள்
என் ரத்தத்தின் ரத்தங்கள்

நாளை
சுவர்க்கத்தில் இருந்து கொண்டு
பெரியப்பா என்றழைத்து
வரவேற்க காத்திருக்கும்
கதீஜா எனும் கற்கண்டே
தாபித் எனும் தங்கமே
உங்களை இப்புது உறவு
வந்துதித்த நன் நாளில்
கண்கள் தேடி கசிகிறது.

அளவற்ற அருளாளனே
நிகரற்ற அன்புடையோனே
கருனையாளனே! எம் எஜமானே!
முளந்தாளிட்டு சிரம் பணிந்து
கேட்கிறோம்
எம் மக்களுக்கு ஆரோக்கியமும்
உன் றஃமத்தும் மஃபிறத்தும்
கடலளவு கிடைப்பதற்கு.

இனி எல்லோரும் ஓதுவோம்
அல்ஹம்துலில்லாஹ்.

அபு உமைர் ஆல் சூரி

The post அல்ஹம்துலில்லாஹ் (கவிதை) appeared first on Sri Lanka Muslim.


Viewing all articles
Browse latest Browse all 220

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!